Monday, August 17, 2009

நல்லதோர் வீணை செய்தோம் அதை நலம் கெட புளிதியல் எறிவதுண்டோ

பிரபாகரன் மரணம்.

இது ஒரு தனி மனிதனின் மரணம் அல்ல, ஒரு கனவு, ஒரு விழை நாசக்காரர்களின் கைகளில் நசுக்கப்பட்டது. ஒரு சமூகம் மீண்டும் ஒடுக்கப்பட்டது. இரும்பு கரம் கொண்டு மூச்சுக்குழாய்கள் நெருக்கப்ப்ட்டனர் மக்கள். இனி அந்த சமூகம் அந்நிலத்தில் உரிமையுடன் வாழ வாய்ப்பு துளியுமில்லை.

இலங்கை – இந்தியா என்கின்ற பரந்து விரிந்த நாட்டின் காலடியில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறிய தீவு. அதன் வட மற்றும் வட கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அத்தீவில் வாழும் மற்றொரு இனம் தான் சிங்கள இனம். இவ்விரு இனத்திற்கும் துளியும் ஒற்றுமையில்லை. மதம், மொழி, வாழ்க்கை முறை, கலாச்சாரம் ஆகிய பலவற்றிலும் மாறுபட்டவர்கள் இவ்விரு சமூக மக்களும்.
இங்கிலாந்து, போர்ச்சுகீஸ், மற்றும் டச்சு நாட்டினர் அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். 1948 ஆம் ஆண்டு இலங்கை இங்கிலாந்திடமிருந்த்து விடுதலை பெற்றது. ஆங்கிலேயர்கள் தமிழ் மக்களின் திறனைப்பார்த்து, அவர்களை கல்வியில் திறம்பட செய்தார்கள். சிங்களவர்கள், மீன் பிடி தொழிலையே செய்து கொண்டு வாழ்ந்தனர்.

ஏறத்தாழ 24% தமிழர்களும், 76% சிங்களவர்களும் வாழும் நிலமாக இருந்தது இலங்கை. ஆங்கிலேயர்கள் வெளியேரும் முன், இரு இன மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டுமென வலியுருத்திவிட்டுச்சென்றான்.1949 – விடுதலை கிட்டிய அடுத்த வருடம், J.R.ஜெயவர்தனே ஒரு சட்டத்தை இயற்றினான். அது, அனைத்து இந்திய வம்ச வழி தமிழர்களை குடியுரிமையற்றவர்கள் என்று தீர்மானித்தது.

இது போதாதென்று, சரியாக 7 வருடங்கள் கழித்து, 1956 ல், Sinhala Only Act என்கின்ற, கொடிய, தமிழர்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போடுகின்ற ஒரு சட்டத்தை இயற்றினார்கள்.அது, அதுவரை ஆட்சிபொழியாக இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை தூக்கி எறிந்தது. சிங்களம் தெரிந்தால் மட்டுமே அரசுப்பணியில் இருக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள் தமிழர்கள். இது போன்ற சட்டங்கள் இயற்றப்படுவதற்கு, வெள்ளையர்கள் ஒரு மறைமுக காரணம். ஆங்கிலேயன் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் நிறைய கல்வி நிறுவனங்களை நிறுவியதால், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடற்று தமிழர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஏராளமான உயர் அரசுப்பணிகளை வகித்தனர். இதை சற்றும் பொறுக்காத சிங்களவன் இது போன்ற சட்டங்களை இயற்றினான்.1970 களின் முடிவில், தமிழர்கள் அனைத்து அரசுப்பணிகளில் இருந்தும் பணியிறக்கப்பட்டார்கள். காரணம், சிங்களத்தில் புலமையில்லை. சிங்களவர்கள் மட்டுமே பணிகளில் தொடர முடிந்தது.இது போதாதென்று, கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மீதும் கை வைத்தனர் சிங்கள ஆட்சியாளர்கள். Policy of Standardization என்ற ஒரு மிகக் கொடிய, குரல் வளையை நசுக்கக்கூடிய ஒரு சட்டத்தை இயற்றினார்கள்.அச்சட்டம் சொன்னது இது தான்.The qualifying mark for admission to the medical faculties was 250 (out of 400) for Tamil students, whereas it was only 229 for the Sinhalese. Worse still, this same pattern of a lower qualifying mark applied even when Sinhalese and Tamil students sat for the examination in English. In short, students sitting for examinations in the same language, but belonging to two ethnic groups, had different qualifying marks”இதற்குப் பிறகு தான் தமிழர்களுக்கென்று தனி ஈழம் அமைய வேண்டுமென்ற நோக்கம் உதிக்க ஆரம்பித்தது.போராட்டங்கள் சாத்வீக முறையிலேயே தொடங்கின.சிங்களர்கள் வேறு மாதிரி பதிலடி தந்தார்கள். சரமாரியாக தமிழர்களை தாக்க தொடங்கினார்கள். பல தமிழர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.சிங்கள அரசே தமிழ் மக்களை கொன்று குவிக்கத்தொடங்கியது. தமிழர்களை எதிரிகளாக பாவிக்கத்தொடங்கினார்கள் சிங்களவர்கள். தேடித் தேடி பிடித்து உயிருடன் எரித்து கொன்றார்கள்.1983 ல் நடந்த கலவரங்களில், முழு அரச சக்தியும் பயன்படுத்தப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் Voter List களை கையில் எடுத்துக்கொண்டு, தமிழ் மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினார்கள். சிறைச்சாலைகளில் வாழ்ந்த 30 தமிழர்கள் சிங்கள கைதிகளால் அடித்துக்கொள்ளப்பட்டார்கள்.

தமிழ் பெண்கள் மிகச்சாதாரணமாக சாலை நடுவில் கற்பழிக்கப்பட்டார்கள். தமிழ் மற்றும் தமிழ் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாலைகளில் தமிழன் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ச்சியான இச்சம்பவங்கள், ஏராளமான நடுநிலையான தமிழர்களையும் தனித்தமிழ் ஈழ நோக்கத்தை ஏற்றுக்கொள்ளச்செய்தன.zve

இச்சம்பவங்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு இளைஞன் 1983 ம் ஆண்டு தொடங்கியதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam - LTTE) என்ற ஒரு சிறு போராட்ட குழு. எதிரிகளின் ரத்த வெறியிலிருந்து காத்துக்கொள்ள, ஆயுதம் ஏந்ததொடங்கினார்கள் தமிழர்கள். சிறு குழுவாக தொடங்கப்பட்ட புலிகள், மிக விரைவில் பெரும் ஆதரவைப்பெற்றார்கள். ஏராளமான தமிழர்கள் தாமாக முன்வந்து படையில் சேர ஆரம்பித்தார்கள். பிரபாகரனை தலைவனாக ஏற்று அவர் பின்னால் நின்று போர் புரிய ஆயத்தமானார்கள்.மாபெரும் சக்தியாக உருவெடுத்துவிட்ட புலிகளை ஒடுக்க இலங்கை ராணுவம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டும், ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்குக்காரணம். நெஞ்சுரம் படைத்த போராளிகள் முன் வெறும் கூலிக்காக சண்டையிடும் ராணுவ வீரர்களால் சற்றும் சோபிக்க முடியவில்லை. மேலும், புலிகளுக்கு இந்தியாவில் பேராதரவும் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முதல் அனைத்து அரசியல் தலைவர்களும் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். புலிகள் இந்தியாவில் போர் தந்திரங்களையும் கற்றுக் கொண்டனர்.இதற்குப்பிறகு ப்ரேமதாசா கொலை, 1991 ல் ராஜீவ் கொலை, கதிர்காமர் கொலை என்று புலிகளின் மீது நிறைய குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயினும், 2000 த்திலிருந்து 2003 வரை இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு பிரிவினரும் ஆயிதப் போரை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தனர்.நவம்பர் 23, 2005 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சே என்கிற ஊழல் அரசியல்வாதி இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் மீது Hambantota Helping Case என்கின்ற ஊழல் வழக்கு உள்ளது. அது 830,000 USD அளவிற்கு சுனாமியின் போது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டுகிறது. ராஜபக்சே தேர்தல் கூட்டணி அமைத்தது, ஆயிரமாயிரம் தமிழர்களை கொன்று குவித்து, சிங்கள இனவாத வாக்குகளின் மூலம் அரசியல் நடத்தும் ஜனத விமுக்தி ப்ரமுன (JVP) மற்றும், ஜதிக ஹெல உருமய (JHU) ஆகிய தீவிரவாத கட்சிகளுடன். இவர்கள், புலிகளுடன் இதற்கு முந்தய விக்ரமசிங்கே அரசு நடத்திய பேச்சு வார்த்தைகளை முற்றாக எதிர்த்தவர்கள்.ஆட்சிக்கு வந்த நாளே புலிகளை கொன்று தீர்த்து, தமிழர்களை ஒடுக்குவோம் என்று அக்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் இயற்றினான். ஈழப்போர் 4 தொடங்கியது.ஒவ்வொரு முறையும் போரில் இலங்கை ராணுவம் அடி வாங்கி ஓடி ஒளிந்திருக்கிறது. ஆனால் இம்முறை ராஜபக்சேவுடன் சேர்ந்து தமிழர்களை முடித்து கட்ட, இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் துணை கொண்டனர். இந்தியா வெளியே மறுத்தாலும், இலங்கை ராணுவத்துக்கு ராடார் வழங்குவது, தளவாடங்கள் பெற்றுத்தருவது, உளவுச்செய்தி பரிமாரிக்கொள்வது என்று பல ஈனத் தொழில்களை புரிந்தது. இதற்கு ஒரே காரணம், ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றது. புலிகள் கொன்றதை நிலைப்படுத்த நான் முயற்சிக்கவில்லை. மாறாக, தமிழர்களையே முற்றாக கொன்று குவிக்க போரிடும் இலங்கை ராணுவத்துக்கு உதவி புரிய இதுவா நேரம்? காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமிழர்களின் உரிமைப்போராட்டத்தைப்ப்பற்றி. அவர்களின் ஒரே குறிக்கோள், பிரபாகரன் முடிய வேண்டும். அதற்கு, எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் கவலையில்லை.இலங்கை ராணுவம், உலக நாடுகளால் தடுக்கப்பட்ட க்ளஸ்டர் (Cluster) குண்டுகளை சரமாரியாக வானிலிருந்து வீசித்தள்ளியது. இக்குண்டுகளின் கோரத்தை இங்கே படியுங்கள். http://en.wikipedia.org/wiki/Cluster_bombஇக்குண்டுகள், சிறார்கள், குழந்தைகள், முதியவர்கள் என பாரபட்சமில்லாமல் கூட்டம் கூட்டமாக மக்களை கொன்று குவித்தது. தமிழர் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் விளையாட ஆடுகளம் இருக்கிறதோ இல்லையோ, பதுங்கு குழிகள் தோண்டப்பட்டன.

பதுங்குக்குழிகள் புதைகுழிகளாக மாறின. சிங்களர்கள் பள்ளிக்குழந்தைகளை குறிவைத்து தாக்கினர். அவர்களின் நோக்கம் அடுத்து வரும் சமுதாயம் அழிந்து ஒழிய வேண்டும். போர்த்திராணியற்ற முதியவர்களை எளிதாக சமாளிக்கலாம், அத்தோடு தமிழ் சமுதாயம் வாரிசற்று முறிந்து போகுமென்ற எண்ணத்தில் தாக்கினார்கள்.இவை அனைத்தும் உலக நாடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது. ராஜபக்சே அரசாங்கம் மேற்கொண்ட ”புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு” என்கிற பிரச்சாரம் மிகவும் கைகொடுத்தது. இதற்கு பெரிதும் துணை நின்றவர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லக்‌ஷ்மன் கதிர்காமர். இவர் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டார். ஆனால் அதற்குள் வெளியுலகம் ராஜபக்சேவின் ப்ரச்சாரத்தை நம்ப ஆரம்பித்தது. அதற்குக் காரணம், உலக அளவில் பெருகியிருக்கும் தீவரவாதிகளின் செயல்பாடுகளும் அதனால் ஏற்படும் இன்னல்களும்தான். ஆனால் புலிகள் எவ்வாறு உருவானார்கள், எதற்காக ஆயுதமேந்தினார்கள் என்ற உண்மை இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும்.புலிகள் மீது ஆயுதம் திணிக்கப்பட்டது. அவர்கள் கைகளில் ஆயுதம் இல்லாதிருந்திருந்தால் இந்நேரம் ஒரு இனம் முழுவதும் பூண்டோடு அழிந்துபோயிருக்கும்.புலிகள் என்ன ஆயுதமேந்தி இன்னொரு நாட்டையா பிடிக்கச்சின்றார்கள்? தங்கள் நிலத்தை பாதுகாக்க, தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்ய துணிந்தார்கள். அவ்வளவுதானே? இது ஒவ்வொரு நாடும் செய்வது தானே? அதன் பொருட்டு தானே ஒவ்வொரு நாடும் ராணுவத்தை உருவாக்கி வைத்திருக்கிறது? அப்படி பார்த்தால் ஒவ்வொரு நாடும் தீவிரவாதிநாடு தானே? இங்கே புலிகள் மட்டும் ஏன் மாற்றாகத்தெரிந்தார்கள்?அதே வேளையில், இடையில் புலிகள் பாதைமாறி சில தவறுகள் செய்ததை மறுக்க இயலாது. ராஜீவ் கொலை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு வேளை அக்கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் ஈழம் கிட்டியிருக்குமோ என்னவோ.. சொல்வதற்கில்லை. அச்செயலை பிரபாகரன், “துன்பியல் சம்பவம்” என்று 2000 ம் ஆண்டு நடந்த சந்திப்பில் கூறியது நினைவிருக்கலாம்.இலங்கை ராணுவத்தின் முதல் வெற்றியாக, புலிகளின் அரசியல் துறை தலைவராக இருந்த எஸ்.பி.தமிழ்ச்செல்வன் க்ளஸ்டர் குண்டுகளுக்கு பலியானார். இது புலிகளுகு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது எனலாம். தமிழ்ச்செல்வன் புலிகளின் சர்வதேச முகமாக இருந்தார்.இதில் இந்திய ராணுவ மற்றும் உளவு அமைப்புகளுக்கு இருந்த தொடர்பு கீழிருக்கும் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது.New Delhi, Dec 10: LTTE leader Tamilselvan, who was killed in a Sri Lankan air attack, may have been the spokesman of the rebels but he certainly was not a peace negotiator, Sri Lanka's Foreign Secretary Palitha Kohona said here. "He (Tamilselvan) might have been the mouthpiece but certainly not a peace negotiator," Kohona told a news channel. "Tamilselvam happened to be where he happened to be on that day and we were taking out targets as and when they became vulnerable," he said. Kohona refused to comment on seeking military aid from India. "Sensitivity is involved in the issue, we should not go into it," he said.Source: http://www.zeenews.com/news412587.htmlஆனால் இந்திய அரசு இன்றுவரை தொடர்ந்து இலங்கைக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது.கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக பாஸ்பரஸ் குண்டுகளும், க்ளஸ்டர் குண்டுகளும், ஷெல்களும் வீசி, மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி சிரித்துக்கொண்டது இலங்கை ராணுவம்.வன்னி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,புதுமாத்தளன் என்று ஒவ்வொரு இடமாக அழித்து கடைசியில் ஒரு சிறு இடத்துக்குள் முடக்கப்பட்டனர் புலிகள். பலம் பொருந்திய இலங்கை ராணுவத்தின் முன் புலிகளின் தாக்குதல் எடுபடவில்லை. கடைசி வரை போர் முனையில் நின்று போரை வழி நடத்தி வந்து கடைசியில் வீர மரணம் தழுவிய பிரபாகரனின் மரணத்தை இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் அறிவித்தன. ஏதோ ஒரு தீவிரவாதியை அழித்து விட்டதைப்போல் செய்திகளை அள்ளி வீசின. போராட்டத்தைப்பற்றியோ அல்லது போராளிகளைப்பற்றியோ சிறிதும் அறிந்திருக்காத இவர்களின் செயல் கண்டனத்துக்குறியது. சிங்களனின் இந்தியக்குரலாக ஒலித்த இவர்களைப்பற்றி நமக்கு முன்பே தெரியும். ஆருஷி என்ற ஒரு பிஞ்சின் மரணத்தை எவ்வளவு கேவலமாக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக்கி, இறந்த அச்சிறுமியின் பிணத்தில் பணம் பார்த்த ஓநாய்கள் தானே இவர்கள். இவர்களுக்கு எங்கே விடுதலை வேட்கை தெரிந்திருக்கப்போகிறது.அது மட்டுமல்லாமல் இன்னும் சில வீனர்கள் தமிழ்நாட்டிலும் பச்சை துரோகம் செய்தனர், செய்துகொண்டும் இருக்கின்றனர். ஹிண்டு ராம், சோ. ராமசாமி, சுப்பிரமணியன்சாமி ஆகியோர் அதில் முதன்மை பெறுகின்றனர்.இன்னும் அரசியல்வாதிகளென்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல இனத்துரோகிகளை நாம் அடையாளம் காண பிரபாகரனின் மரணம் உதவுகிறது. தமிழினத்தலைவர் என்று பிதற்றிக்கொள்ளும் கருணாநிதி, மருத்துவர் ராமதாஸ், திடீரென்று தெனி ஈழம் வேண்டுமென்று வாக்குக்காக நாக்கை மடக்கிப்பேசும் ஜெயலலிதா போன்ற சற்றும் சுரணையில்லாத அரசியல்வாதிகளுக்கு இலங்கையில் நடந்த உக்கிரப்போர் ஒரு சாராருக்கு ஆயுதமாகவும், இன்னொருவருக்கு கேடையமாகவும் பயன்பட்டது. இதை வைத்துக்கொண்டு இவர்கள் நடத்திய அறிக்கைப்போர் இருக்கிறதே… சொல்லி மாளாது.கொள்கை மட்டுமே குறிக்கோள், இனத்தை காப்பது மட்டுமே லட்சியம் என்று தன் வாழ்நாள் முழுவதும் போர் முனையிலேயே கழித்து வீரமரணம் எய்தினானே, அவன் தமிழினத்தலைவனா? அல்லது குடும்பத்து உறவுகள் ஒவ்வொன்றாக அமைச்சர்களாக்க மத்திய அரசுடன் இப்போது மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் மானங்கெட்டவர்கள் இனத்தலைவர்களா? இது வரை ஒரு தடவையேனும் இலங்கை பிரச்சணைக்காக சென்னையை விட்டு வெளியே சென்று போராடியிருப்பாரா? இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது ட்வெறும் தந்திகளையும், அறிக்கைகளையும், ஒரு வேளை உண்ணாவிரதங்களையும் மட்டுமே மேற்கொண்டிருந்தவர்கள், இன்று உடல்நிலை சரியில்லாத போதும், அதை பொறுட்படுத்தாது, தில்லிக்கு விரைந்து சென்றிருக்கிறார்கள்.அடுத்து, நமது ”இனக்காவலர்” மருத்துவர் ஐயா ராமதாசும், அவர் கூட்டாளிகளும்.. தேர்தல் முடிகின்ற நாள் வரை ஏதோ போர்களத்துக்கு சென்று போரிடுபவர் போல் சீறிக்கொண்டிருந்தார் ராமதாசு. தேர்தல் முடிந்த நாளிலிருந்து இன்று லட்சக்கணக்கான தமிழர்கள் Government Concentration Camp களில் அடைபட்டு, சொந்த நிலத்தில் சோற்றுக்கு வழியில்லாமல் சிங்களனின் துப்பாக்கிகளுக்கு இரையாகிக்கொண்டிருக்கும் போது கூட ஒரு வார்த்தை பேசவில்லை. தேர்தலில் தோற்றுப்போனாராம். மனம் வெதும்பி கிடக்கிறார் போலும்.ஜெயலலிதாவைப்பற்றி கூற ஒன்றுமில்லை. சந்தர்பவாதிகளிலும் மோசமான அரசியல்வாதி ஜெயலலிதா. இக்கட்டுரையை இதுவரைக்கும் பொறுமையாக படித்தவராயிருந்தால் அவருக்கு ஈழத்தமிழர்களின் மீது எவ்வளவு அக்கரை இருந்திருக்கிறது என்று ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.இது போல் பச்சோந்திகளும், ஓநாய்களும் நிறைந்த இந்நாட்டிடமிருந்து கருணையோ அல்லது நேர்மையோ எதிர்பார்த்துக்காத்திருப்பது மடத்தனம்.ஈழத்தமிழனே.. உணர்ந்து கொள். உனக்கென்று யாருமில்லை. உன் தோள்களே உன்னைத்தாங்கட்டும். உரிமைகளை மீட்டெடுக்க நீ மட்டுமே போராடவேண்டும். உன் கண்ணீரை துடைக்கக்கூட தமிழகம் தயாரில்லை. உன் உடலிலிருந்து வெளியேறும் குருதியை பார்த்து, எங்களால் கண்ணீர் மட்டுமே சிந்த முடியும். ஏனெனில் எங்களுக்கென்று உனக்கு வாய்த்ததைப்போல் ஒரு நேர்மையான தலைவன் இல்லை. இருப்பவர்கள் அனைவரும் போலி முகத்துடன் உலா வரும் வீனர்களே. கோடிகனக்கான சொத்துகளை சேர்த்தும் பதவியும் பண வெறியும் பிடித்து அலையும் மோசக்காரர்கள்.

sources:
1.BBC news2.wikipedia 3.http://www.tamilsforum.com/unspeakabletruth.html4.Various news sources
other sources:Distant voices, desperate lives - http://www.newstatesman.com/asia/2009/05/sri-lanka-pilger-british-tamil
Freedom denied: The crushing of Sri Lanka's Tamils - http://www.straight.com/article-222986/croatia-freedom-denied-crushing-sri-lankas-tamilsஇந்தியா தவறு செய்துவிட்டது - http://www.puthinam.com/full.php?2b35VUZ4b34d6If04dcsSnZdb0eE4G024d30ZvG3e0dO2Sufce02g7eW3cc4Vh27ae
Tamil Ethnic Cleansing Index (only for the year 2009) - http://www.puthinam.com/load.php?teci